Tuesday 30 September 2014

மனித உணர்வு

                                      மனித உணர்வு


                          உணர்வு என்ற சொல் எங்கேயாவது பார்த்தாலோ கேட்டாலோ கூட மனித மனம் உடனே உடல் சார்ந்தே அதை பொருட்படுத்தி பார்க்கிறது அல்லது யோசிக்கிறது. இதில் காதல் ,காமம் என்ற உணர்வுகள் தான் பல மனங்கள் எப்போதும் அசைபோடும். இந்த உணர்வுகள் ஏன் வந்து பலபேர்களின் வாழக்கையை புரட்டிப்போட்டுவிட்டு செல்கிறது என்று பல பேர் பல நேரங்களில் யோசித்ததுண்டு.ஏன் அதோடு நில்லாமல் பல அழகான, அன்பான மனிதர்களை கல்லறைக்கும் அனுப்பிய பெருமை உள்ள உணர்வுகள் இவைத்தான். கமல்ஹாசன் ஒரு பாடலில் இதை அழகாக பதிவு செய்திருப்பார் . “காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா, இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா” என்று. ஆனாலும் யாரும் அதை நம்பவும் அதை உட்கொள்ளவும் தயாராக இல்லை.ஏன் என்றால் அதை இப்போதும் பலபேர் தெய்வீகத்துடன் ஒப்பிடுகின்றனர். அது அப்படிப்பட்டதா என்று இப்போது பல ஆராயிச்சிகள் செய்து ஒரு தெளிவான முடிவுக்கு மருத்துவ உலகம் வந்துள்ளது. ஏன் இப்படி மனித மனம் ஒரு வித பதற்றத்துடன் இதை கைக்கொள்ளுகிறது என்றும் ஆராய்ந்து முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

                                                   
                                      தனியாக மனித உடலில் உள்ள இரசாயன சுரப்பிகள் பல விதமான இராசயனங்களை பல நேரங்களில் சுரக்கின்றது.அது மனிதன் உண்ணுகின்ற உணவை செரிமானம் செய்ய வைப்பது முதல்  உடலில் ஏற்படுகின்ற காயங்களை செரி செய்வது வரையான பல செயல்களை மனிதனின் மனம் கூட அறியாவண்ணம் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. இதேப்போன்றதொரு சுரப்பிகள் சுரக்கின்ற ஒருவித இரசாயனம் தான் “ஓக்ஸ்ஸிடோசின்” மற்றும் “டோபமைன்”.  இதை மருத்துவ விஞ்ஞானிகள் இப்போது தனித்தனியாக பிரித்து எடுத்துள்ளனர் .இந்த இரு மூலக்கூறின்/இரசாயனத்தின் வேலைகள் சிறிது அல்ல. 


                           இந்த இரு மூலக்கூறு தான் மனிதனை காமப்பார்வை வீச வைப்பதும், காம களியாட்டங்கள் செய்ய தூண்டுவதும்,பங்காளியிடம் நம்பிக்கையுடன் நடந்து கொள்வதற்கும் , சில பல நேரங்களில் அடி ஆழ மனதில் ஒரு அழகான காதலை அல்லது ஒரு வித பாசத்துடனான நட்பை கூட தூண்ட செய்கிறது.இதை விட பயங்கரமான ஒரு வித காம தாபத்தையும் , ஒரு வித ஆக்ரோஷமான அல்லது ஒரு பெண்/ஆணை அடைய வேண்டும் என்றும் புணர வேண்டும் என்றும் ஒரு விதமான அடங்கா தேடலையும் கொள்ள செய்வது இந்த மூலக்கூறுகள் தான்.இந்த மூலக்கூறை 1990-ஆம் ஆண்டு வாக்கில் கண்டுப்பிடித்து விட்டனர்.ஆனால் அப்போது இது தாய்மை உணர்வை தூண்டக்கூடிய ஒரு இரசாயனம் தான் என்று கணித்தனர். ஆனால் இப்போது அதை பற்றிய விரிவான ஆராய்ச்சிகளின் பயனாக இந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளது.


                            இப்போது இதை கண்டுபிடித்ததற்கு அவர்களை பாராட்டுவதைவிட திட்டுவதே செரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் . ஏன் என்றால் இனி காதலர்கள் தெய்வீக காதல் என பொய் சொல்லவும் முடியாது. ஏன் என்றால் தெளிவான ,விவரமான “யோக்கியர்கள்” உனக்கு “ஓக்ஸ்ஸிடோசின்” கொஞ்சம் அதிகமா சொரக்குது கொஞ்சம் நல்ல டாக்டரா பார்த்து கட்டுப்பெடுத்த ஊசி போட்டுக்கோ அப்படின்னு சொல்ல போகிறார்கள்.

                      
                                                       இதை இனி மாத்திரை போட்டு விற்பார்கள்.     பல கணவன்மார்கள், மனைவிகள் மற்றும் காதலர்கள் இதை வாங்கி தின்னவும் செய்வார்கள் இன்னும் சில வருடங்களில். இனி பல பல உணர்வுகளுக்கும் தனி தனியாக மாத்திரைகள் விற்பனைக்கு வரும். எந்த உணர்வு கொஞ்சம் கம்மியாக இருப்பதாக உணர்கிறோமோ அதை வாங்கி வைத்துக்கொண்டால் போதுமானது.அப்போதும் சூடு , சொரனைக்கென்று மாத்திரை வருமோ என்னமோ. ஏன் என்றால் பல “அரசியல்வியாதிகளுக்கு” அதை கலக்கி கொடுத்தாவது நம் நாட்டை நன்றாக்கி விடலாம் என்ற பேராசை தான் மனதில்... 

No comments:

Post a Comment